இலங்கையின் (Sri Lanka) தற்போதைய மற்றும் எதிர்கொள்ளப்படும் சவால்களுக்கான தீர்வுகள்
குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையும் விவாதித்துள்ளன.
இது தொடர்பில், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர்
மார்க் ஆண்ட்ரே ஃபிராஞ்ச், பிரதமர் ஹரிணி அமரசூரியாவை அலரி மாளிகையில்
சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஒன்பது முக்கிய துறைகள்
சுகாதாரம், கல்வி, விவசாயம், காலநிலை மாற்றம், அமைதி கட்டமைத்தல் மற்றும்
பாலின சமத்துவம் உள்ளிட்ட ஒன்பது முக்கிய துறைகளிலும் இதன்போது கருத்தாடல்கள்
இடம்பெற்றுள்ளன.
ஜனநாயக நிர்வாகத்தை வலுப்படுத்துவதில், அரசியலில் வேட்பாளர்களாக
மட்டுமல்லாமல், செயலில் வாக்காளர்களாகவும் பெண்களின் அதிக
பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை இரண்டு தரப்பினரும் இதன்போது ஏற்றுக்கொண்டனர்.