அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (02) நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.
கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெரமுனவின் ஆசிர்வாதம் பெற்றவரே அதிபர் தேர்தலில் வெற்றியீட்டுவார்: மகிந்த பகிரங்கம்
தொழிற்சங்க நடவடிக்கை
கடந்த 29 ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரமே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
வேதனப் பிரச்சினையை நிவர்த்தி செய்யுமாறு கோரி கடந்த காலங்களில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் பாரிய அதிகரிப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |