Courtesy: கபில்
வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்று (24) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக
தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டம்
கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50
பேர் வரையில் கலந்து கொண்டனர்.
அத்தோடு வெள்ள
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 25000 ரூபா
கொடுப்பனவு பாதிக்கப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட
பலருக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் குறித்த போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிராம சேவையாளர், அபிவிருத்தி
உத்தியோகத்தர் மற்றும் சமுத்தி உத்தியோகத்தர்களுக்கு எதிராக பதாதைகளை தாங்கி
இருந்ததோடு கோஷங்களையும் எழுப்பி இருந்தனர்.
இதேவேளை பாரபட்சமற்ற முறையில் குறித்த நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம்
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











