யாழ். தையிட்டி விகாரைக்கு அருகில் நேற்றைய தினம் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து, தற்போதைய அரசாங்கமும் பௌத்த மதமாக்கலை பின்பற்றுகின்றதா என கேள்வியை தூண்டுகின்றது.
யாழில் அமைக்கப்பட்டுள்ள சட்டபூர்வமற்ற விகாரை என அடையாளப்படுத்தப்படும், தையிட்டி விகாரை விவகாரத்திற்காக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் மக்கள் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுத்த நிலையில், அங்கு வந்த பொலிஸ் அதிகாரிகள், அவர்களை அப்புறப்படுத்த கடுமையாக செயற்பட்டனர்.
இதன் காரணமாக, ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
இதற்கு பின்னர், சிலர் கைது செய்யப்பட்டதுடன் பின்னர் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
யாழில் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

