வடக்கு மாகாண மட்ட திறந்த கரம்(Carrom) போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர்
ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட வேலணை மத்திய கல்லூரி மாணவி ஜெ.விதுர்ஷினி இவ் வருடத்திற்கான
(2026) வடக்கு மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று குழு போட்டியிலும் கலந்துகொண்டு வடக்கு மாகாண அணிக்கு தனது திறமையை
வெளிப்படுத்தி அணி சம்பியனாவதற்கும் பங்காற்றியுள்ளார்.
தீவக மண்ணிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்
முன்பதாக கடந்த 18.04.2026 நடைபெற மாவட்ட மட்ட கரம் போட்டியில் வேலணை பிரதேச
செயலகம் சார்பில் கலந்து கொண்டு மாவட்டமட்ட போட்டியில் வெற்றி பெற்று யாழ்
மாவட்ட அணியில் இடம் பிடித்திருந்த ஜெ.விதுர்ஷினி,
நேற்றையதினம் (13.06.2026) யாழ் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில்
நடைபெற்ற மாகாணமட்ட போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில்
நடைபெறவிருக்கும் தேசிய மட்ட போட்டியில் வடக்கு மாகாணம் சார்பாக கலந்து
கொள்ளவுள்ளார்.

இவ் வெற்றியானது யா/ வேலணை மத்திய கல்லூரிக்கும், வேலணை பிரதேசத்திற்கும்,
தீவக மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
இதேவேளை கரம் போட்டியில் தீவகமண்ணை சார்ந்த வீரரொருவர் வடக்கு மாகாண அணியில்
பங்கேற்று தேசியமட்ட போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதற்தடவையாகும்.
பாடசாலையின் முதல்வர் இ.ஹஸ்ரன் றோய் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அ. றொ. அனோஜன்
ஆகியோர் குறித்த மாணவியின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்தமை
குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/velanai-central-student-northern-karam-champion-1781449097

