வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது பயண பொதிகளில் மறைத்து கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளத்தை வசிப்பிடமாகக் கொண்ட 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தல்
இதன்போது, 4.9 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பெண் டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்த முயற்சித்துள்ளார்.
மேலும், அவருடைய பயண பொதிகளில் இருந்து 149 அட்டைப்பெட்டிகளில் இருந்த 29,800 சிகரெட் குச்சிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

