யாழில் (Jaffna) இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளாதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (11) இரவு யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு, மாமுனை, செம்பியன்பற்றைச் சேர்ந்த 39 வயதான ஜே. நதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காவல்துறையினர் டிப்பர் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை நீதிமன்றம் நடவடிக்கைக்காக மருதங்கேணி காவல் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
https://www.youtube.com/embed/69VBjwtukBQ

