யாழில் மது போதையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கோப்பாய் பகுதியை சேர்ந்த தங்கவடிவேல் முருகானந்தன்
(வயது 34) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
மது போதையில் காணப்பட்ட நிலையில்
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு
மது போதையில் காணப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய
நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

