யாழ்ப்பாணம் – நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில்
ஈடுபட்ட இளைஞர் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்றைய தினம்(20) உதைப்பந்தாட்டம் விளையாடிய இளைஞர் மீது கோல் கம்பம் வீழ்ந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
அதில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை (வயது 29) என்ற
இளைஞர் சிகிசை பலனின்றி உயிரிழந்துள்ளார்
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.