முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் உயிரிழந்த தமிழ் இளைஞன்: பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

முல்லைத்தீவு- முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக
நீதியான விசாரணை இடம்பெற்று வருகின்றது என  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தவறு செய்தால் யார் என்றாலும் அவர்களை
நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று  (13) பழைய
கச்சேரி மண்டபத்தில் நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள்

முல்லைத்தீவு- முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இளைஞர்கள் ஒருவர் உயிரிழந்த
சம்பவம் தொடர்பாக 3 இராணுவ
வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவில் உயிரிழந்த தமிழ் இளைஞன்: பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல் | Youth Killed In Mullai Fair Trial

அங்கு
இரும்பு திருடப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பில் இராணுவத்தினர்
விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இரும்பு கடத்தலில் 3 இராணுவத்தினர்
ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் நிமித்தம் 3 இராணுவத்தினரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி ஆலோசனை

எனவே தவறு செய்தால் யாரென்றாலும் அவர்களை நீதியின் முன்
நிறுத்துவது எமது பொறுப்பாகும்.

அதேவேளை இராணுவ முகாங்களையே பொலிஸ் நிலையங்களையே அவசியம் இல்லாமல் அகற்ற
வேண்டியது இல்லை என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

முல்லைத்தீவில் உயிரிழந்த தமிழ் இளைஞன்: பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல் | Youth Killed In Mullai Fair Trial

பாதுகாப்பு அமைச்சர்
என்ற முறையில் பாதுகாப்பான அல்லது முக்கியமான இடங்களை தவிர நில விடுவிப்பினை
தொடக்கத்தில் இருந்து கூடுதல் நிலங்களை விடுவித்துள்ளோம்.

நில பிரச்சனை தொடர்பாக இன்று விவாதித்தோம். எனவே எங்கள் முதல் நோக்கம்
மக்களின் நிலம் பொலிஸ் நிலையங்கள் கையகப்படுத்தி இருந்தால் மாற்று இடத்தை
கண்டுபிடிப்பதாகும். எனவே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குவது அல்ல மக்களின்
பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் கொள்கை எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.