தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதுவராக மாரிமுத்து பத்மநாதனை நியமிப்பதற்கு உயர்பதவிகள் குறித்த நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, இந்தோனேசியா, பிரேசில், மலத்தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் மற்றும் அமைச்சுச் செயலாளர் ஆகியோருக்கான நியமனங்களை உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்ற குழு அனுமதித்துள்ளது.
இந்த குழுக் கூட்டம் கடந்த ஜூலை 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
நியமனங்கள்
இதன்போது பின்வரும் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.அதன்படி, சுமதுரிகா சஷிகல பிரேமவர்தன – இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவர்
சி.ஏ. சாமிந்த இனோக்கா கொலொன்னே – பிரேசிலுக்கான இலங்கை தூதுவர்
மொஹமட் ரிஸ்வி ஹஸன் – மலத்தீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்
எல்.ஆர்.எம்.என்.பி.ஜி.பி. கடுருகமுவ – துருக்கிக்கான இலங்கை தூதுவர்
ருவந்தி டெல்பிட்டிய – நேபாளத்துக்கான இலங்கை தூதுவர்
மரிமுத்து கே. பத்மநாதன் – தென் கொரியாவுக்கான இலங்கை தூதுவர்
அயிஷா ஜினஸேனா (வழக்கறிஞர்) – நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுத் திணைக்களத்தின் செயலாளராக நியமனம்
இந்த உயர் பதவிகள் குழுவை பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடத்தப்பட்டு, உறுப்பினர்களாக குமார ஜயகொடி, அனில் ஜயந்த, ஹர்ஷன நானயக்கார, உபாலி பன்னிலாகே, சரோஜா சவித்ரி பவுல்ராஜ், ஹன்ஸக விஜேமுனி, ரிஷாட் பதியூதீன், தயாசிறி ஜயசேகர மற்றும் நிசாம் கரியப்பர் ஆகியோர் பதவி வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.