கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்று (31) அதிகாலை 5.30 மணியளவில் 23 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்யூ வூட்லர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை
பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

