முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழா

இலங்கை (Sri Lanka) சட்டக்கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக “மன்றம் 75” என்ற நிகழ்வொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வை இலங்கை சட்டக்கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றமானது முன்னெடுக்கவுள்ளது.

மேற்படி நிகழ்வு வரும் 23 ஆம் திகதி மாலை நான்கு மணிக்கு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சட்டக்கல்லூரி 

இலங்கை சட்டக்கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றமானது தலைநகரில் உள்ள தொன்மையானதும் ஆளுமையானதுமான தமிழ் மன்றங்களில் ஒன்று என்ற பெருமை கொண்டது.

சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழா | 75Th Anniversary Of The Law Students Tamil Forum

1950 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற இவ் மன்றமானது 75 ஆண்டுகளிற்கு முன் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த மன்றத்தில் சட்டக் கல்லூரி உள்ளக மாணவர்களும் ஏனைய சட்டக் கற்கை நிறுவனங்களில் கற்று, மாணவர்களாக சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும் அங்கம் வகிக்கின்றார்கள்.

தமிழ் மன்றம்

இதனடிப்படையில், சட்ட மாணவர் தமிழ் மன்றமானது இன்று (20) தனது அகவை 75 இல் காலடி எடுத்து வைக்கின்ற நிலையில் “மன்றம் 75” எனும் பெயரில் பவள விழா கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழா | 75Th Anniversary Of The Law Students Tamil Forum

இடம்பெறவுள்ள விழாவிற்கு பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதிபதி S.துரைராஜா பங்குபற்ற உள்ளதுடன் கௌரவ விருந்தினராக இலங்கை சட்டக்கல்லூரி அதிபர் பிரஷந்த லால் டி அல்விஸ் பங்குபற்றவுள்ளார்.

அத்துடன் அடிப்படை உரிமையின் நிதர்சனத்தை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக்காட்டிய “ஜெய்பீம்” படத்தின் நிஜ கதை நாயகன் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி K.சந்துரு நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

நிகழ்ச்சிகள்

இவற்றைத் தொடர்ந்து நிகழ்வில் நீதிபதிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள் , சட்டத்தரணிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

விழாவில் கலைமாமணி ஸ்ரீறிமதி.சிவானந்தி ஹரிதர்ஷன், பரத கலாவித்தகர் ஶ்ரீமதி. ஷாலினி வாகீஸ்வரன் மற்றும் கீதாஞ்சலி சுதர்ஷனின் நெறியாள்கையில் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படவுள்ளது.

சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழா | 75Th Anniversary Of The Law Students Tamil Forum

அத்தோடு, இசைக்கலைமணி ஸ்ரீமதி. விஷ்ணுப்ரியா ரட்ணகுமாரின் நெறியாள்கையில் இசை நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது.

குறித்த நிகழ்வில் அணைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.