கொழும்பின் புறநகர் பகுதியான தெகிவளையில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் தகாத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய இந்த சோதனையில் 09 பெண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 26 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் கைது
இரத்மலானை, மஹரகம, தெகிவளை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெகிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெகிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.