வாழ்க்கைக்கான போராட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் மற்றும் வலிகள் என புதைந்து போயுள்ளன.
எனினும், தனித்து விடப்பட்ட, பல பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தடம் மாறிபோகாமல், வைராக்கியமாக வாழ்ந்து வருவதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்
அதுவும், அறியா பருவத்திலேயே, திருமணம் முடித்து, பிரிந்த நிலையில், தனித்து நின்று, பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்படும் தாய்மாரின் கதைகளும் ஏராளம் ஏராளம்.
அவ்வாறான ஒரு தாயின் வலியை சுமந்து வருகிறது என் இனமே என் சனமே நிகழ்ச்சி,

