இலங்கையின் தேசிய கல்வி
நிறுவன சபைக்கு (NIE) யாழில் இருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கையின் தேசிய கல்வி
நிறுவன சபைக்கு யாழ்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ் பல்கலைக்கழக
விரிவுரையாளருமான மகேந்திரன் திருவரங்கனையும் உடுவில் மகளிர்
கல்லூரியின் முன்னாள் அதிபர் ஷிராணி மில்ஸ்ஸையும்
நியமித்துள்ளார்.
கல்வி அமைச்சர்
இவர்கள் இருவரும் எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி கல்வி
அமைச்சரை சந்திக்கவுள்ளனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இருவருக்கும்
பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


