யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
படகில் இரண்டு கடற்றொழிலாளர்கள் கடந்த 15ஆம் திகதி, மாலை 3.00
மணிக்கு ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.
தேடும் பணி
இருப்பினும், அவர்களில் எவரும் இன்னும் கடலுக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாண மாவட்ட
நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமல் போன குறித்த இரு கடற்றொழிலாளர்களையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


