இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்படும் எந்தவொரு கைதியும் சிறைக்குள் நுழைவதற்கு முன் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்படுவர்.
2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் தேசபந்து தென்னகோன் கடந்த 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதன்பின் மாத்தறை (Matara) நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20.03.2025) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்படும் எந்தவொரு கைதியும் சிறைக்குள் நுழைவதற்கு முன் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்படுவர்.
அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் அது நடந்திருக்கலாம்.
மற்ற கைதிகளைப் போலவே குறைந்தபட்ச வசதிகள் சிறைக்குள் தேசபந்துவுக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கும்.
மேலும், சிமெண்ட் தரையில் தூங்க வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பாய் அல்லது மெத்தை பெற முடியும்.
மேலும் இது தொடர்பான பல விடயங்களுடன் வருகிறது இன்றை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…
https://www.youtube.com/embed/-Q46ei-HFi4