அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.
இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருஞ்சீரகம்- 50g
- வெந்தயம்- 50g
- தேங்காய் எண்ணெய்- 100g

பயன்படுத்தும் முறை
- முதலில் கருஞ்சீரகம், வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- இப்போது கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சூடுபடுத்தவும்.
- அடுத்து அதில் அரைத்த பொடியை சேர்த்து 2 நிமிடம் கலந்து விடவும்.
- எண்ணெய் நிறம் மாறி அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியதும் ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
-
இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி மசாஜ் செய்து வர, சில வாரங்களிலேயே முடி நன்கு வளரும்.

