சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஏற்படக்கூடிய மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக மருத்துவ சிகிச்சை பெறுவது கட்டாயம் என சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பதில் விசேட வைத்திய நிபுணர் அருணி ஹதமுண இதனை வலியுறுத்தியுள்ளார்.
சிகிச்சை பெறுவது கட்டாயம்
அத்துடன், நுளம்புகளால் பரவக்கூடிய வைரஸ் ஊடாக சிக்குன்குன்யா ஏற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவில் சிக்கன்குனியாவினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சிலருக்கு மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி சில வாரங்களுக்கு காணப்படலாமென அருணி ஹதமுண தெரிவித்துள்ளார்.

