யாழ். செம்மணியில் மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உட்பட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதமை போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களை நினைவூட்டுகிறது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் நடவடிக்கை
இது தொடர்பில் அவர் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில், ” இலங்கையின் செம்மணியில் மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உட்பட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதமை போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களை நினைவூட்டுகிறது.
The discovery of a mass grave in Chemmani, Sri Lanka – including the remains of three babies – is a painful reminder of the atrocities committed during the conflict.
In today’s @CommonsForeign, I asked the Foreign Secretary what steps the UK is taking to ensure accountability… pic.twitter.com/kHcTu3qPlf
— Uma Kumaran MP (@Uma_Kumaran) July 8, 2025
இன்றைய கலந்துரையாடல் ஒன்றில், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும், சர்வதேச குற்றவியல் நீதமன்றுக்கு பரிந்துரை செய்வதற்கும் பிரித்தானியா என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பதை வெளியுறவுச் செயலாளரிடம் கேட்டேன்.

பிரித்தானியா மேலும் என்ன தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்க முடியும் என்பதைப் பார்ப்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார் என்பதை நான் மிகவும் வரவேற்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

