இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 21 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருலப்பனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
நாடு கடத்த நடவடிக்கை
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபர்களை வெலிசறை தடுப்பு மையத்தில் தடுத்து வைத்துள்ளதுள்ளனர்.

அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

