முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து நாட்டுப்படகில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக தமிழகம் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் தமிழக  கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலமாக
ராமேஸ்வரம் வந்து இறங்கிய நபர் கைது செய்யப்பட்டு பரமக்குடி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கையர்
ராமேஸ்வரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர்
ஜானகிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று (08.11) அதிகாலை ராமேஸ்வரம்
பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவு பொலிஸார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இருந்த பூங்காவில்
சந்தேகத்துக்கிடமாக அமர்ந்திருந்த நபர் ஒருவரை பிடித்து சோதனை செய்த போது
அவரிடம் இலங்கை பணம், இலங்கை கடவுச்சீட்டு, இலங்கை அரச அடையாள அட்டையும் இருந்தமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது | Arrest Srilankan Entered Tamil Nadu Illegally Sea

தீவிர விசாரணை

இதனையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம்
வல்வெட்டித்துறை நடராஜன் வீதியைச் சேர்ந்த கண்ணன் (34) என்பது தெரியவந்துள்ளது.

கண்ணன் கடந்த 6 ஆம் திகதி இரவு இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான
முறையில் பைபர் படகில் புறப்பட்டு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வந்து
இறங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது | Arrest Srilankan Entered Tamil Nadu Illegally Sea

இதன்பின்னர் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள கண்ணனின் மனைவியை
பார்ப்பதற்காக வேதாரணியத்தில் இருந்து பேருந்தில் புறப்பட்டு ராமேஸ்வரம்
பேருந்து நிலையம் வந்திறங்கி மண்டபம் அகதிகள் முகாமிற்கு செல்வதற்காக
பூங்காவில் அமர்ந்திருந்த போது கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட கண்ணனை பொலிஸார் ராமேஸ்வரம் நகர்  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இவர் மீது கடவுச்சீட்டு இன்றி
சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்த
பொலிஸார் அவரை பரமக்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வரும் 21ஆம் திகதி வரை
புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.