மத்திய அரசாங்கம் நாங்கள் கோரும் நிதியை விடுவிப்பதற்குத் தயாராக உள்ளது.
ஆனால், வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர்
அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, வெறும்
சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய அதிகாரிகளை நினைத்து
நான் வெட்கப்படுகிறேன், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் விசனம்
வெளியிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நிர்வாகச் சேவை
“நான் நிர்வாகச் சேவையில், ஆளுநராகப் பதவியேற்ற பின்னரே மாகாண நிர்வாகத்தினுள்
நுழைந்தேன். மாகாண நிர்வாகம் இவ்வளவு பின்னடைவைச் சந்திக்கக் காரணம்,
பொறுப்பிலுள்ள சில அதிகாரிகளே.

இவர்கள் பதவிகளையும் கதிரைகளையும் பிடித்து
வைத்துக்கொண்டு, மக்கள் சேவையாற்றாது காலத்தை ஓட்டுகின்றனர்.
மக்களின்
வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளை எவ்வித தயக்கமும்
இன்றிப் பெற்றுக்கொள்ளும் இவர்கள், அந்த மக்களுக்குச் சேவையாற்ற மட்டும்
விரும்புவதில்லை.
இத்தகைய சுமைகளையும் சுமந்துகொண்டே நாம் பயணிக்க
வேண்டியுள்ளது” என கூறியுள்ளார்.

