அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள காஸ்கேடியா துணை மண்டலம் என அழைக்கப்படும் பகுதியில் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய சுனாமி ஏற்படக்கூடும் என்று வர்ஜீனியா டெக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு எச்சரித்துள்ளது.
வடக்கு கலிபோர்னியாவிலிருந்து வான்கூவர் தீவு வரை சுமார் 600 மைல் நீளமான இந்த பகுதி மிகப்பெரிய பூகம்பங்களின் மண்டலம் என அவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், அப்பகுதியில் 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான நிலநடுக்கத்திற்கு 15 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிகழ்வு திடீரென நடந்தால், காஸ்கேடியா முழுவதும் கடலோரப் பகுதியில் மூழ்கக்கூடும்.
சுற்றுச்சூழல் அமைப்பில் மாற்றம்
அத்துடன், நிலநடுக்கத்தின் எதிர்வினை, நூற்றுக்கணக்கான அடி உயர சுனாமி அலையை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதன் விளைவாக, அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்கள் ஆபத்தை எதிர்கொள்வர்.
மேலும், இதனால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், இந்த பாரிய சுனாமியால் 30,000 பேர் இறக்க நேரிடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இதேவேளை, 170,000 கட்டிடங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடையக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

