யாழ்ப்பாணம் (Jaffna)-பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சர்ஜன்ட் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (23) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த றதித்த ரங்கன திசாநாயக்க
(வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இராணுவ வீரருக்கு நேற்றையதினம் (22) காலை நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதன்போது, பலாலி இராணுவ
வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.
இதன்போது, மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று
பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.