மன்னாரில் பாடசாலை மாணவியொருவர் மீது பாலியல் சீண்டல் புரிந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (18) காலை மன்னார்- முருங்கன் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
மன்னாரின் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரே இராணுவச்சிப்பாயின் பாலியல் சேட்டைக்கு இலக்காகியுள்ளார்.
மேலதிக விசாரணை
இதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் முருங்கன் பொலிஸார் இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

