சபுகஸ்கந்தையில் கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இன்னும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் எம்.பி.க்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டிசம்பர் 11 ஆம் திகதி சபுகஸ்கந்தையின் டெனிமுல்ல பகுதியில் முன்னாள் சபாநாயகர் பயணித்த ஜீப் ஒரு காருடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்
காரில் பயணித்த 25 வயது பெண், அவரது 6 மாத கைக்குழந்தை மற்றும் 55 வயது தாய் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர், டிசம்பர் 12 ஆம் திகதி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் விபத்தைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அதே நாளில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு ரூ. 200,000 ரொக்கப் பிணையுடன் பிணை வழங்கப்பட்டது.

