யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத
நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று(15) அதிகாலை 5 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கான காரணம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக் காவலாளியின் வீட்டின் மீதே
இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம்
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.