யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதைப்பொருள் கடற்படையால்
மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை
தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று (07.02.2025) கடற்படையினர் கட்டைக்காடு கடற்கரை பகுதியில் கண்காணிப்பை மேற்கொண்ட வேளை
கடற்கரை பகுதியில் சிறு பொதியில் இருந்த 1Kg கொக்கைன் போதைப்பொருளை
மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெற்றிலைக்கேணி
கடற்படையினர் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

