நாட்டில் இன்றைய தினம் மற்றுமொரு பஸ் விபத்து பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் சுமார் இருபது பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அலதெனிய யட்யான்கல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாத்திரை சென்ற பஸ் ஒன்றே பாதையை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பிரிகம, கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

