இலங்கை மின்சார சபை, 2025 ஜூன் முதல் டிசம்பர் 2025 வரை 18.3 சதவீத மின்சாரக் கட்டண உயர்வை கோரியுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திற்கு சமர்ப்பித்த திட்டத்தில், இந்த
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை
2025 ஜூன் முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் இலங்கை மின்சார சபைக்கு
42,196.1 மில்லியன் ரூபாய் பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இதனை ஈடு செய்யவே 8.3வீத கட்டண அதிகரிப்பு தேவைப்படுகிறது என்று மின்சார
சபை கூறியுள்ளது.
இந்தநிலையில் மின்சார சபையின் இந்தக் கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாடுகள்
ஆணைக்குழு விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://tamilwin.com/article/ceylon-electricity-board-demands-increase-1747522080

