அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான செவ்ரானின் எல் செகுண்டோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு..
தீ
விபத்துக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை எனவும் வெடிப்பு ஏற்பட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விரைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

