கொழும்பில் ஆபாச இணையத்தளம் ஒன்றில் பெருந்தொகை காணொளிகளை பதிவு செய்த இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான தம்பதியை மிரிஹானை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்னர்.
கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 36 வயதுடையவர்கள் என்றும், ராஜகிரிய – வெலிக்கடை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆபாச காணொளிகள்
குறித்த தம்பதியினால் இணையத்தளம் ஒன்றில் 334 ஆபாச காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நாளையதினம் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நுகேகொட பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

