முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலி்ல் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (31) உத்தரவிட்டுள்ளார்.

தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்றொழிலி்ல் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24
ஆம் திகதி அதிகாலை 17 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த கடற்றொழிலாளர்களின்  வழக்கு இன்றைய தினம் மீண்டும்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் தலைமன்னார் கடற்படை
முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதல் கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட
நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள
திணைக்களத்தில் ஒப்படைக்க பட்டிருந்தனர்.

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | Detention Of Indian Fishermen Arrested In Mannar

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான்
நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் முன்னிலைப்படுத்திய நிலையில் தொடர்ந்தும்
விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

விளக்கமறியல்

இந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் (07.02.2025) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | Detention Of Indian Fishermen Arrested In Mannar

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத இழுவை மடி வலைகளை
பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்ந போது அந்தப் பகுதியில் ரோந்து
பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இரண்டு ரோலர் படகுகள் உட்பட 17 கடற்றொழிலாளர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.