மாத்தறை – தெவிநுவர பகுதியில் விஷ்ணு ஆலயத்துக்கு அருகில் உள்ள சிங்காசன
வீதியில் இரண்டு நபர்களைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய
மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தர, தலல்ல தெற்கு பகதியில் வசிக்கும் 33 வயது நபரே நேற்று வியாழக்கிழமை
மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இரட்டைக் கொலை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரட்டைக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட
துப்பாக்கிதாரிகளுக்கு உடந்தையாக இருந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 27 மற்றும் 29 வயதான இருவர் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை துப்பாக்கிதாரி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.