முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் இந்த வருடத்தில் இதுவரை நிகழ்ந்த அனர்த்தம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17பேர்
நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா
ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இம்மாதம் முதலாம் திகதி நால்வர்
நீரில் மூழ்கி உயிரிழந்தமையால் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாக
காணப்படுவதாகவும் குறிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அதில் மூவர் பாடசாலை
மாணவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பாடசாலையில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்
வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (03.06.2025) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

 இந்தவருடத்தில் இதுவரை நீரில் மூழ்கி 17பேர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில்,
நீரில்மூழ்கி 17பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2025.06.01 நேற்று முன்தினம் முல்லைத்தீவு – குமுழமுனைப் பகுதியில்
கோவில் தீர்த்தக்கேணியில் மூழ்கி இரண்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
ரஜிதரன் கிருசிகா, சற்சொரூபநாதன் ரஸ்மிளா ஆகிய இருமாணவிகளே இவ்வாறு
உயிரிழந்துள்ளனர்

முல்லைத்தீவில் இந்த வருடத்தில் இதுவரை நிகழ்ந்த அனர்த்தம் | Disasters That Occurred In Mullaitivu This Year

ஒரேநாளில் நான்குபேர் அதில் மூவர் மாணவர்கள்

இதுதவிர தாமரைக்குளத்தில் பூப்பறிக்கச்சென்ற இராஜசேகர் நிலாந்தன், சிவநேசன்
பிரணவன் ஆகியோருமாக ஒரேநாளில் நான்குபேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில்
மூவர் பாடசாலை மாணவர்களாக காணப்படுகின்றனர்.

முல்லைத்தீவில் இந்த வருடத்தில் இதுவரை நிகழ்ந்த அனர்த்தம் | Disasters That Occurred In Mullaitivu This Year

இவ்வாறாக ஒரேநாளில் நான்குபேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமையால்
முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாகக் காணப்படுகின்றது.

பாடசாலைகளில் நீச்சல் தடாகங்களை அமைத்து பயிற்சி

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள மாணவர்கள் மூவருக்கும் நீச்சல் தெரியாது.
இப்படியாக பல மாணவர்கள் நீச்சல் தெரியாதநிலையில் காணப்படுகின்றனர்.

முல்லைத்தீவில் இந்த வருடத்தில் இதுவரை நிகழ்ந்த அனர்த்தம் | Disasters That Occurred In Mullaitivu This Year

எனவே
பாடசாலைகளில் நீச்சல் தடாகங்களை அமைத்து மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளை
வழங்கினால் நல்லதென எண்ணுகின்றேன். தயவுசெய்து இந்தவிடயத்தை
கவனத்திலெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.