அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவில் பாரபட்சம் பார்க்கப்பட்டதாக தெரிவித்து சண்டிலிப்பாய் பிரதேச
செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராக இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தி அலுவலகத்தில் முரண்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது, சண்டிலிப்பாய் பிரதேச
செயலகத்திற்கு உட்பட்ட புதிய வீடமைப்புத் திட்டம் கல்லுண்டாயில் வசிக்கும்
யோகநாதன் ராயித் ஆகிய எனக்கு தந்தை இல்லை. தாயின் பாராமரிப்பிலும்
பாதுகாப்பிலும் வளர்ந்து வருகின்றேன்.
அத்துடன் நான் கல்வி கற்று வருகிறேன்.
எனது தாயார் குடும்பச் சுமை காரணமாக தற்காலிகமாக கொழும்பிற்கு வேலைக்கு சென்று
3 மாத காலமாகின்றது.
ஆகையால் எனது பாதுகாப்பு கருதி என்னை குருநகரில் வசிக்கும் பெரிய தாயாருடன்
விட்டுச் சென்றுள்ளார்.
முறைப்பாடு
எனது அம்மம்மாவும் எங்களோடு இருப்பதால் அவருடைய அடிப்படை தேவைகளையும், முழு
குடும்ப சுமையையும் எனது தாயாரே தாங்கி வருகிறார்.

எனது வீடு கல்லூண்டாயில் இருப்பதால் நான் அங்கு ஒவ்வொரு ஞாயிறும் சென்று
வருவதோடு அங்கு மத ஆராதனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடப்பதுண்டு.
ஆனால் இரு வாரமாக நான் அங்கு செல்லவில்லை வெள்ளம் வந்ததால் வீட்டின் மின்
இணைப்புக்களில் தண்ணீர் சென்றுள்ளது என உறவினர் சென்று பார்வையிட்டு வந்து
கூறினார்.
உரிய நீதி
அதனால் அரசாங்கம் வழங்கும் வெள்ள அனர்த்த நிதியினை வழங்குவதற்காக பதிவுகளை
மேற்கொள்ளுமாறு எனது தாயார் கிராம சேவையாளரிடம் கேட்க அவர் அதனை மறுத்து
விட்டார்.

குறித்த குடியிருப்பில் வாழாத குடும்பங்களுக்கு அந்த
கொடுப்பனவுக்காக பதிவு செய்யப்பட்டது, ஆனால் எனது தாயாரை மட்டும்
புறக்கணித்து ஊழல் செய்கிறார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலதிகாரிகளிடமும் எனது தாயார் கதைத்து சாதகமான
முடிவுகள் கிடைக்காத காரணத்தினால் அரச அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு உரிய
நீதியைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.




