இணையம் வழியாக பணம் மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை கணினி குற்ற புலனாய்வுப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இணையம் வழியாக பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறி ஒரு கணக்கில் பணத்தை மோசடியாக வரவு வைத்ததாக சந்தேகநபருக்கு எதிராக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற புலனாய்வுப்பிரிவினர் மேலதிக விசாரணை
கணினி குற்ற புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் போது, ஒரு டெலிகிராம் குழுவில் பலரை இணைத்து ஏமாற்றி ரூ. 6,860,000 மோசடி செய்யப்பட்டதாகவும், மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ. 500,000 ஐ சந்தேகநபர் தனது வங்கிக்கணக்கில் வரவு வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வெலிபென்னவைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கணினி குற்ற புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

