காலி – ஹிக்கடுவை பகுதியில் குப்பைக் குவியலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 24 தோட்டகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காலி மாட்ட குற்ற விசாரணைப் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூவர் கைது
சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்களும் ஒரு பெண்ணும் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், சிறையில் இருக்கும் நபரின் மகன் என தெரியவந்துள்ளது.

இவர் மீட்டியாகொடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவராவார்.
காலி மாட்ட குற்ற விசாரணைப் பிரிவால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

