கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று (21.12.2025) இராணுவத்தினர் தர்மபுர பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து
சுண்டிகுளம் கலப்பு என்னும் காட்டுப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, 53
கிலோ 500 கிராம் நிறைய உடைய கேரளா கஞ்சா மறைத்து
வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், மீட்கப்பட்ட கஞ்சா தொடர்பாக
தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


