மலைப்பகுதியில் காரை பின்நோக்கி செலுத்த முற்பட்ட போது காருடன் மலையில் இருந்து பெண் ஒருவர் விழும் காணொளியொன்று தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த சம்பவமானது, இந்தியா(India) மகாராஷ்டிராவில்(Maharashtra)இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், ஸ்வேதா தீபக் சர்வாஸ் என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
காருடன் விழுந்த பெண்
தனது காரை ஒரு குன்றின் மீது திருப்பி 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்தமையானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த காணொளியை அவரது நண்பர் சூரஜ் சஞ்சாவ் முலே என்பவர் தனது கமராவில் படம்பிடித்துள்ளதுடன் தன் கண் முன்னால் நடந்த இந்த கோர சம்பவத்தை அவர் தடுக்க முயன்றும் முடியவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வேகத்தில் பரவி வருவதுடன் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram