தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

