யாழ்.வடமராட்சி கிழக்கு- ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (23) காலை
புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ
புலனாய்வுத்துறையும் மருதங்கேணி பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பினை
மேற்கொண்டிருந்தனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, 40 கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.