இந்திய நடிகை நந்தினி காஷ்யப்(Nandini Kashyap) இன்று (30) குவஹாத்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நடிகை ஓட்டி வந்ததாகக் கூறப்படும் கார் மோதியதில் 21 வயது மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து 25 ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் குவஹாத்தியின் தக்கிங்காவ் பகுதியில் நடந்தது.
வாகனம் மூலம் மாணவரை மோதிக் கொன்ற நடிகை
நடிகை சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றது அருகிலுள்ள சிசிடிவி கமராவிலும் பதிவாகியுள்ளது.

விபத்துக்குப் பிறகு, மாணவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.
விபத்து காரணமாக அவரது தலையில் பலத்த காயங்கள் மற்றும் இரு கால்களிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாக இறந்த மாணவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

