பரந்தன் – முல்லைத்தீவு A-35வீதியின் பதினோறாவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது
கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த
நிலையில் இந்திய இராணுவத்தினரின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட
குழுவினர் குறித்த பகுதியை பார்வையிட்டு இந்திய இராணுவத்தினருடன் கலந்துரையாடிருந்தார்.
இந்த களவிஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் வீதி அபிவிருத்தி
அதிகார சபை பிரதம பொறியியலாளர், கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள் கடற்தொழில்
அமைச்சின் செயலாளர் மருங்கன் மோகன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஒப்பரேஷன் சாகர் பந்து
யாழ். இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி, ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையில், ஒப்பரேஷன் சாகர் பந்து நடவடிக்கையின் மூலம் இலங்கையில் பல்வேறு
பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் அபிவிருத்தி பணியினை முன்னெடுத்து
வருகின்றனர்.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பரந்தன் முல்லைத்தீவு
பிரதான வீதியின் 11ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தின்
அபிவிருத்தி பணிகள் தற்பொழுது இந்திய இராணுவத்தின் ஒப்பரேஷன் சாகர் பந்து
அணியினர் முன்னெடுத்த வருகின்றனர்.
அது மட்டுமின்றி தற்பொழுது ஏற்பட்ட
வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இதுவரையில் இந்தியா
60 மெற்றிக்தொன் உணவு மற்றும் உடை மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்
இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கையிலும் இந்தியா இலங்கையுடன்
தொடர்ந்து தனது உறவை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.








