ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தற்போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன், அந்த தாக்குதலில் நடந்த மற்றுமொரு துயர் சம்பவம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
திருமணம் முடிந்து ஆறு நாட்களேயான கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவமே பலரையும் துயரத்தில் மூழ்கடித்துள்ளது.
பலியான கடற்படை அதிகாரி
இந்தியக் கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த கடற்படை அதிகாரி அண்மையில் திருமணம் செய்திருந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு அவரது மனைவியுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் (22) பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனிடையே இவரது இழப்பு அனைத்து கடற்படை வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.