முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல்

இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு படகில் வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் கடுமையாக
தாக்கிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட் பாலேந்திரன்
என்ற இளம் குடும்பஸ்தர் 2007 ஆம் ஆண்டில் தனது 18ஆவது வயதில் கடல் மார்க்கமாக
இந்தியா சென்றுள்ளார்.

தாயம் திரும்ப முயற்சி

பின்னர் கடந்த 18 வருடங்களாக இந்தியாவில் வசித்து வந்த
நிலையில் மீண்டும் தாயம் திரும்ப முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 22 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகு
ஒன்றில் தலைமன்னார் பகுதியை நோக்கி வந்துள்ளார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல் | Indian Return Attacked In Mannar

இதன் போது தலைமன்னார் கடற்படையினரால் குறித்த குடும்பஸ்தர் கைது
செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய குறித்த குடும்பஸ்தருக்கு இதய நோய் காணப்படுகின்ற நிலையில் அதற்கான
மருத்துவ அறிக்கைகளையும் தன் வசம் எடுத்து வந்துள்ளார்.

எனினும் தலைமன்னார்
கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்ற கடற்படையினர் நோயாளியான குறித்த
குடும்பஸ்தரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதி

பின்னர் குறித்த நபரை கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.தலை
மன்னார் பொலிஸார் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல் | Indian Return Attacked In Mannar

பின்னர் குறித்த நபரை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட பதில் நீதவான்
சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த
நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள
நிலையில் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதய நோயாளியான குறித்த குடும்பஸ்தர் தனக்கான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும்
காண்பித்த போதும் கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர்
வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.