சிங்கப்பூர் பொலிஸ் திணைக்களத்தில் துணை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக (Auxiliary Police Officer) இலங்கையில் நேர்முக பரீட்சை நடாத்தப்படவுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக 100 இலங்கையர்களை தேர்வு செய்யும் வகையில் இந்த நேர்முக பரீட்சை நடாத்தப்படவுள்ளது.
வாகன இறக்குமதிக்கான அனுமதி! முதலில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்
தகைமைகள்
கொழும்பு 05 – லலித் அத்துலத் முதலி விளையாட்டரங்கில் நாளை (03) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இந்த நேர்முக பரீட்சை நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (03) முதல் 06 ஆம் திகதி வரை காலை 06.30 முதல் முற்பகல் 10 வரை இந்த நேர்முக பரீட்சை நடத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
01.G.C.E (A/L) பரீட்சையில் குறைந்தது 3 C சித்திகள்.
02.ஆங்கில மொழி தேர்ச்சி
03.வயது :- 21 முதல் 39 வரை
04.பொலிஸ் அறிக்கை
05.மருத்துவ ரீதியில் உடல் தகுதி
06.உடலில் பச்சை குத்தி இருக்கக்கூடாது.
07.உயரம் :- 164 CM
08.குறைந்த பட்ச உடல் எடை :- 50KG
மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் :- 070-6788110
தென்னிலங்கையில் ஹோட்டலுக்குள் நடந்த குழப்பம்: பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை
எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – நாளை முதல் புதிய விலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |