லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் (LPL) இரண்டாவது அரையிறுதி போட்டியில் கண்டி ஃவெல்கன்ஸ் (Kandy Falcons) அணியை ஒரு ஓட்டத்தில் வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி ஃவெல்கன்ஸ் அணித்தலைவர் முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தார்.
குசல் மெண்டிஸ்
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் போது யாழ் கிங்ஸ் அணிக்காக பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களை குவித்தார்.
வெற்றி இலக்கு
இதனை அடுத்து, 188 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கண்டி ஃவெல்கன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 186 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கண்டி ஃவெல்கன்ஸ் அணி சார்பாக அன்ட்ரே பிளெட்சர் 38 ஒட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 32 ஒட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக பெபியன் எலென் 04 விக்கெட்டுக்களையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.






Source: https://ibctamil.com/article/ipl-2024-match-results-paly-off-1721498067

